Monday, 18 August 2014

தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தும் தமிழக முதல்வரின் உன்னத திட்டங்கள்


தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தும் தமிழக முதல்வரின் உன்னத திட்டங்கள்: தமிழக முதல்வரின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியதாவது:–தமிழக முதல்வர் கல்வி ஒன்றே நிலையான செல்வம் என்பதை அறிந்து இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கென இந்நிதியாண்டில் ரூபாய் 17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை புரிந்துள்ளார். இது அரசின் வேறு எந்த துறைக்கும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து இத்தைகைய நிதியை ஒதுக்கி மாணவ, மாணவிகளுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழக முதல்வரின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கல்வியின் தரம் உயர்ந்து வருகிறது. முதல்வரின் நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகள் தரம் உயர்ந்தும் பாதுகாப்பான முறையிலும் செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் இதுபோன்ற பல்வேறு அரசின் நலத்திட்டங்களால் தமிழகம் ஒவ்வொரு நாளும் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது:– மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் 12–ம் வகுப்பு பயின்ற 16.16 லட்சம் மாணவ–மாண வியர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 1,637.78 கோடி செலவில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப் பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் பயிலும் மாணவ–மாணவியர்களுக்கு கல்வி கற்க உதவும் அனைத்து உபகரணங்கள், சீருடைகள் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கல்வி தேர்ச்சி விகிதம் மற்றும் கல்வியின் தரம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment